×

திருப்போரூர் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்போரூரை அடுத்துள்ள மானாம்பதி குயில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது, மனைவி மணிமாலா (27). இவர்களுக்கு, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மணிமாலாவிற்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்றும் பிரச்னை தீராமல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வயிற்று வலியால் துடித்த அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுரேஷ், மயங்கிக் கிடந்த மணிமாலாவை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு திருமணமாகி 4ஆண்டுகள் மட்டுமே ஆவதால், அவர் உண்மையிலேயே வயிற்று வலியால் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று செங்கல்பட்டு கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திருப்போரூர் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,RTO ,Suresh ,Manampathi ,Quilkuppam ,Tirupporur ,Manimala ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்